நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025  எஸ்.பி.எம். தேர்வில்  ஒட்டுமொத்த தேர்ச்சி மேம்பட்டாலும் சிறந்த மதிப்பெண் பெறுவோர் சற்று குறைந்தனர்

புத்ரா ஜெயா: 

2025  எஸ்.பி.எம். தேர்வில் அனைத்து பாடங்களிலும் 'A' பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

அனைத்து பாடங்களிலும் A+, A அல்லது A- தரங்களுடன் சிறந்த முடிவுகள் பெற்ற மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 13,779 (3.55%) என்றும், 2024-ல் இது 13,827 (3.65%) ஆக இருந்ததோடு ஒப்பிடும்போது இது குறைந்துள்ளது என்றும் கல்வி அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹம்மத் அஸாம் அஹ்மட் கூறினார்.

எனினும், அனைத்து பாடங்களிலும் A+ பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டின் 352-லிருந்து 376 ஆக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

"இதற்கிடையே, அனைத்து பாடங்களிலும் குறைந்தது C (க்ரெடிட்) பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 92,347 (23.76%) ஆக உள்ளது, 2024-ல் இது 86,040 (22.73%) ஆக இருந்ததிலிருந்து மேம்பட்டுள்ளது" என்று செவ்வாயன்று (மார்ச் 31) எஸ்.பி.எம். 2025 முடிவுகள் பகுப்பாய்வை முன்வைக்கும் போது அவர் கூறினார்.

குறைந்தது 'E'-உடன் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் 1,36,791-இருந்து 1,41,728 மாணவர்களாக அதிகரித்துள்ளது.

மாணவர்கள் செவ்வாயன்று (மார்ச் 31) காலை 10 மணிக்கு தங்கள் பள்ளிகளில்  எஸ்.பி.எம். முடிவுகளைப் பெறலாம். தனியார் மாணவர்கள் அருகிலுள்ள மாநில கல்வி அலுவலகத்தில் தங்களது தேர்வு முடிவுகளைப் பெறலாம்.

நாடு முழுவதும் 3,350 மையங்களில் மொத்தம் 4,13,299 மாணவர்கள் 2025 எஸ்.பி.எம். தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset