செய்திகள் மலேசியா
எரிபொருள் விலை உயர்வால் 100-க்கும் மேற்பட்ட கட்டுமான திட்டங்கள் நிறுத்தப்பட்டன
கோலாலம்பூர்:
மேற்காசிய மோதலால் எரிபொருள் விலை திடீரென உயர்ந்தத்தைத் தொடர்ந்து ஒப்பந்தக்காரர்கள் "வெள்ளை கொடி தூக்கியதைத்" தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு, வளர்ச்சி திட்டங்களைத் தொடர முடியவில்லை என்று மலேசியா புமிபுத்ரா ஒப்பந்தக்காரர்கள் சங்கம் (PKBM) வெளிப்படுத்தியுள்ளது.
யுத்த மோதல் தொடர்ந்தால் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மேற்பார்வையாளர்கள் உட்பட கட்டுமான துறையுடன் தொடர்புடைய கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்தும் உள்ளதாக தலைவர் டத்தோ அஸ்மான் யூசுஃப் கூறினார்.
இதன் அடிப்படையில், உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் மீண்டும் எழ உதவும் வகையில் ஆறு மாத காலத்திற்கு முக்கிய கட்டுமான பொருட்களுக்கான விலை மாற்ற நிலை (VOP) வழிமுறையை அரசாங்கம் மீண்டும் செயல்படுத்துமாறு மலேசியா புமிபுத்ரா ஒப்பந்தக்காரர்கள் சங்கம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.
"இந்தத் திடீர் எரிபொருள் விலை உயர்வு கட்டுமான துறையின் இயக்க செலவில் அசாதாரணமான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, குறிப்பாக கனரக இயந்திரங்கள் பயன்பாடு, கட்டுமான பொருட்கள் போக்குவரத்து, திட்ட தளவாட சங்கிலியைப் பாதிக்கிறது.
"பெரும்பாலான தொழிலாளர்களால் வேலையைத் தொடர முடியவில்லை, ஏனெனில் குறிப்பாக உள்கட்டமைப்பு பணிகளில் இயந்திர வாடகையை ஏற்க முடியவில்லை.
"எனவே கட்டுமான பொருட்கள் செலவு 30 முதல் 40 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் 41,000 ஒப்பந்தக்காரர்களைப் பாதிக்கும் 2023-ல் நிறுத்தப்பட்ட கட்டுமான பொருட்களுக்கான விலை மாற்ற நிலையை அரசாங்கம் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கோருகிறோம்" என்று இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
கட்டுமான பொருட்கள் செலவில் கணிசமான உயர்வை சமாளிக்க ஒப்பந்தக்காரர்களுக்கு உதவுவதற்காகவும், அரசாங்க திட்டங்கள் தடைபடாமல் திட்டமிட்ட நேரத்தில் முடிவடைவதை உறுதிப்படுத்துவதற்காகவும் இது செயல்படுத்தப்படுகிறது.
அதே நேரத்தில், இந்த நிலைமை தொடர்ந்தால் புக்கிட் மெர்பாவ் விளையாட்டு வளாகம், லிங்காரன் தெங்கா உட்டாரா நெடுஞ்சாலை , பினாங்கில் உள்ள மாஸ் ரேபிட் டிரான்சிட் போன்ற சில பெரிய திட்டங்களும் பாதிக்கப்படும் என்று அஸ்மான் கவலை தெரிவித்தார்.
10,000 லிட்டர் மொத்த விநியோகத்திற்கு தற்போது சந்தை சலுகை விலை லிட்டருக்கு RM6.98 வரை அடைந்திருப்பதாக அவர் கூறினார்.
"இயந்திரம், தளவாட வாடகை விகிதங்களும் தற்போது ஒரு நாளுக்கு எக்ஸ்கவேட்டருக்கு RM1,300; பேக்ஹோவுக்கு RM650; மூன்று டன் லாரிக்கு RM550, ஒரு டன் லாரிக்கு RM450 வரை உயர்ந்துள்ளன.
"இந்த விலை நேரடியாக டீசல் செலவு உயர்வால் ஒட்டுமொத்த கட்டுமான திட்ட செலவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று அவர் கூறினார்.
நிலைமை தொடர்ந்தால் கட்டுமான பொருட்கள் விலையில் திடீர் உயர்வு, தளவாட, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, ஒப்பந்தக்காரர்களின் லாப வரம்பு சுருங்குவது போன்ற சில முக்கிய விளைவுகளை சங்கம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
திட்ட முடிவில் தாமதம், இழப்பு அபாயம், பணப்புழக்கம் பாதிக்கப்படுவது, ஒப்பந்தக்காரர்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம், திவாலாகும் ஆபத்தும் இதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
"கட்டுமான பொருட்களுக்கான விலை மாற்ற நிலையைச் செயல்படுத்துவதோடு, குறுகிய கால தீர்வாக, அரசாங்கம் பாதிக்கப்பட்ட தற்போதுள்ள திட்டங்களை மறுபரிசீலனை செய்வதும், கட்டுமான பொருட்கள் விலையைக் கட்டுப்படுத்துவதும், தற்போதுள்ள வரிகளைப் பராமரிப்பதும், பாதிக்கப்பட்ட திட்டங்களுக்கான ஒப்பந்த காலத்தை நீட்டிப்பதும் தேவையாகிறது.
"நீண்டகால அடிப்படையில், கட்டுமான துறை, ஒப்பந்தக்காரர்களுக்கான சிறப்பு ஊக்க தொகுப்பைச் செயல்படுத்துவதும், ஒப்பந்தங்களை மறுகட்டமைப்பு செய்வதும், இறக்குமதி கட்டுமான பொருட்கள் செலவைக் குறைப்பதும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, மலேசியா புமிபுத்ரா தொழில் சேவை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (PENGILANG) தலைவராகவும் இருக்கும் அஸ்மான், தொழில்துறைக்கு செலவு அதிர்ச்சியைக் குறைக்க படிப்படியான மானிய வழிமுறையைச் செயல்படுத்துவதைக் கருத்தில் கொள்ளுமாறும் அரசாங்கத்தை வேண்டுகோளிட்டார்.
தற்போதைய நிலைமை இயக்க செலவை 30 சதவீதம் உயர்த்துகிறது, உற்பத்தி நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது, நுகர்வோர் விளைவுகளைச் சுமக்க நேரிடும் என்ற கவலை இருப்பதாகவும் அவர் கூறினார்.
"மிகவும் பயனுள்ள, இலக்கான தணிப்பு நடவடிக்கைகளை வகுக்க தொழில் வீரர்களுடன் மிகவும் விரிவான ஊடாட்ட அமர்வுகளை ஏற்பாடு செய்யுமாறும் அரசாங்கத்தைக் கோருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 5:16 pm
கே.எல்.சி.சி.யில் 'புகைப்பட புழுக்கள்' என நம்பப்படும் 25 நபர்கள் கைது
March 31, 2026, 4:46 pm
கெப்போங் கொலை வழக்கு: இந்திய நாட்டவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
March 31, 2026, 4:23 pm
எஸ்.பி.எம் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார்
March 31, 2026, 3:27 pm
எஸ்.பி.எம். தேர்வுக்கு வராத மாணவர் எண்ணிக்கை சரிவு: கல்வி அமைச்சின் நடவடிக்கைகள்
March 31, 2026, 3:12 pm
கூலாய் - செடெனாக் பாதையில் கோர விபத்து: வடக்கு நோக்கிய அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளது
March 31, 2026, 2:55 pm
மலேசியக் கப்பல்களுக்கு பச்சைக்கொடி காட்டிய ஈரான்
March 31, 2026, 2:44 pm
