நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் வழக்குகளைக் கையாள அதிகபட்ச சிறைத் தண்டனை, பிரம்படி ஆகியவை பரிசீலிக்கப்பட வேண்டும்: பாப்பாராயுடு

ஷாஆலம்:

மது, போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டும், பெருகிவரும் கவலைக்குரிய வழக்குகளைக் கையாள, அதிகபட்ச சிறைத் தண்டனைகள், பிரம்படி உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும்.

சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வி. பாப்பாராயுடு இதனை வலியுறுத்தினார்.

நேற்று கிள்ளான் உள்ள ஜாலான் ராயா பாரத் சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்த சமீபத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றவாளிகளுக்குப் பாடம் புகட்ட தற்போதுள்ள அணுகுமுறை இன்னும் போதுமானதாகக் கருதப்படவில்லை.

குற்றவாளிகள் மீது கடுமையான, தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இது இனி ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல, ஏனெனில் இது போன்ற பல துயரச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

சமூகத்திற்கு ஒரு பாடமாக அமையவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு, குறிப்பாக இறந்தவர் குடும்பத் தலைவராக இருக்கும்போது, ​​உரிய உதவி உடனடியாகச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் நீதியை நிலைநாட்டவும், இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், கடுமையான, தீவிரமான அமலாக்கத்தின் மூலம் ஒரு கடுமையான அணுகுமுறையைச் செயல்படுத்த வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset