நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மது, போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

மது, போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவர் டத்தோ வீ. சரவணக்குமார் இதனை கூறினார்.

நேற்று காலை கிள்ளானில் உள்ள ஜாலான் ராயா பாரத் சாலையில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி மரணமடைந்தார்.

மது, போதைப்பொருள் போதையில் இருந்த ஒரு நபர் ஓட்டி வந்த கார் மோதியதான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபோன்ற நபர்களின் அலட்சியத்தால் ஒரு உயிர் இன்று இல்லை.

அதன் அடிப்படையில் மது, போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset