நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிபோதையில் கார் ஓட்டி மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு மரணம் விளைவித்த ஆடவர் 4 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்

கிள்ளான்:

குடிபோதையில் கார் ஓட்டி மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு மரணம் விளைவித்த ஆடவர் 4 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

தென் கிள்ளான் மாவட்ட போலிஸ் தலைவர் லிம் ஜிட் ஹுவே இதனை கூறினார்.

சிலாங்கூர், கிள்ளான் ஜாலான் ராயா பரத் சாலையில் நேற்று மதுபோதையில் வாகனம் ஓட்டி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதி அவரைக் கொன்ற நபர், நான்கு நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கான நீதிமன்றக் காவல் உத்தரவை இன்று முதல் வியாழக்கிழமை வரை நீதிபதி சித்தி ஜுபைதா மஹத் பிறப்பித்துள்ளார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 44(1), அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952-இன் பிரிவு 15(1)(ஏ) ஆகியவற்றின் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக சந்தேக நபர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset