செய்திகள் மலேசியா
மோட்டார் சைக்கிளோட்டியின் மரணத்திற்கு காரணமான கார் ஓட்டுநர் மது, போதைப்பொருள் உட்கொண்டிருந்தது பரிசோதனையில் உறுதியானது: போலிஸ்
கிள்ளான்:
மோட்டார் சைக்கிளோட்டியின் மரணத்திற்கு காரணமான கார் ஓட்டுநர் மது, போதைப்பொருள் உட்கொண்டிருந்தது பரிசோதனையில் உறுதியானது.
தென் கிள்ளான் போலிஸ் தலைவர் லிம் ஜிட் ஹுவே இதனை கூறினார்.
நேற்று காலை கிள்ளானில் உள்ள ஜாலான் ராயா பாரத் சாலையில் நடந்த ஒரு விபத்தில் மது, போதைப்பொருள் போதையில் இருந்த ஒரு நபர் ஓட்டி வந்த கார் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
காலை சுமார் 11.40 மணியளவில் நடந்த இந்த விபத்தில், மோதலின் தாக்கத்தால் 30 வயதுகளில் இருந்த அந்த நபர் மற்றொரு காரின் மீது தூக்கி வீசப்பட்டார்.
20 வயதுள்ள உள்ளூர் நபர் ஒருவர் ஓட்டி வந்த ஹோண்டா சிட்டி கார், அதிவேகமாகவும் அபாயகரமாகவும் ஓட்டப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
ஓட்டுநர் முன் சென்ற பல வாகனங்களை முந்திச் சென்ற பிறகு, எதிர் திசைப் பாதைக்குள் நுழைந்து எதிர் திசையில் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக நம்பப்படுகிறது.
இந்த மோதலின் விளைவாக, 30 வயதுள்ள உள்ளூர்வாசியான பாதிக்கப்பட்டவர், ஒரு பெரோடுவா மைவி மீது தூக்கி வீசப்பட்டார்.
இதனால் அவர் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் என உறுதிசெய்யப்பட்டது.
மேலும் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார் என அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 11:01 am
219வது போலிஸ் தினத்தையொட்டி சிகாமாட் போலிஸ் தலைமையகத்தில் சிறப்பு புஜை
March 30, 2026, 10:43 am
மொழி காக்கும் போரில் ஒரு துணிச்சலான குரல்: பேனா ஆறு தசாப்தங்களாக மொழி, இலக்கியத்தை மேம்படுத்துகிறது
March 30, 2026, 10:34 am
புதைக்கப்பட்ட சிசுவின் எலும்புக்கூடு: காதலன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது
March 30, 2026, 10:24 am
கிளாந்தான் ஆற்றில் நீர்மட்டம் சரிவு: சுற்றுச்சூழல் சமநிலை பாதிப்பு குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை
March 30, 2026, 10:18 am
அல்-சுல்தான் அப்துல்லாவிற்கு தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகள் இல்லை: பகாங் அரண்மனை அறிவிப்பு
March 30, 2026, 10:14 am
காரிலிருந்து வாணவேடிக்கை பட்டாசு வெடித்ததாக நம்பப்படும் நால்வர் கைது
March 30, 2026, 9:31 am
