நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உரிமம் இன்றி கார் ஓட்டிய வங்கதேசத்தவர்: காரைப் பறிமுதல் செய்த போக்குவரத்துத் துறை

கோலாலம்பூர்:

ஜாலான் துன் ரசாக், கோலாலம்பூர் பகுதியில் முறையான ஓட்டுநர் உரிமம் இன்றி கார் ஓட்டி வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரைச் சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற சோதனையின்போது பிடிபட்ட அந்த நபர், மலேசிய ஓட்டுநர் உரிமத்திற்குப் பதிலாகத் தனது தாய்நாடான வங்கதேசத்தின் ஓட்டுநர் உரிமத்தைக் காட்டி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது சகோதரரை வேலைக்கு அழைத்துச் செல்வதற்காகச் சென்றபோது பிடிபட்ட அந்த நபர், தான் ஓட்டி வந்த கார் தனது சகோதரர் வேலை செய்யும் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்று வாக்குமூலம் அளித்துள்ளார். 

அவர்கள் வங்கதேச தூதரகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சோதனை நடத்தப்பட்டது. மலேசியச் சாலை விதிகளின்படி செல்லுபடியாகாத ஆவணத்தை வைத்திருந்ததால், அந்த நபர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அந்த வாகனம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இது போன்ற விதிமீறல்கள் குறித்துக் கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறைத் தலைவர் ஹமிடி அடம் கூறுகையில், சாலை விதிகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்களின் புகார்கள், தொடர் கண்காணிப்புகள் மூலம் சாலைப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படும் வாகன ஓட்டிகளைக் கண்டறியப் போக்குவரத்துத் துறை தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

வெளிநாட்டவர்கள் மலேசியச் சாலைகளில் வாகனம் ஓட்டும்போது அந்தந்த நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டு முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset