செய்திகள் மலேசியா
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைக்கு தனியார் துறை முன்னுரிமை வழங்க வேண்டும்: பிரதமர் அன்வார்
புத்ராஜெயா:
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைக்கு தனியார் துறை முன்னுரிமை வழங்க வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கு மோதலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, தற்போதைக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையில் கவனம் செலுத்த வேண்டும்.
இன்று மாலை தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில்,
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகள் படிப்படியாகச் செயல்படுத்தப்படும்.
பொதுத்துறை மட்டுமின்றி, பல நிறுவனங்கள், வங்கிகளால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகளை தனியார் துறையும் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
உலகளாவிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் மோதலால் ஏற்பட்ட தாக்கம், அதன் விளைவாக எண்ணெய், எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளை டத்தோஸ்ரீ அன்வார் சுட்டிக்காட்டினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 10:11 pm
பூடி 95 திட்டத்தில் மாற்றம் தற்காலிகமானது; மக்கள் புரிந்துகொள்வார்கள்: பிரதமர் நம்பிக்கை
March 26, 2026, 10:08 pm
பத்துமலையில் தேசிய ஆலய கருத்தரங்கு; டான்ஸ்ரீ நடராஜா தொடக்கி வைப்பார்: டத்தோ சிவக்குமார்
March 26, 2026, 6:56 pm
பூடி 95 திட்டத்தின் கீழ் ரோன் 95 பெட்ரோல் அளவு 200 லிட்டராக குறைக்கப்படும்: பிரதமர்
March 26, 2026, 5:52 pm
டீசல் விலை உயர்வு: 5,000 பேருந்து தொழிலதிபர்கள் பாதிப்பு
March 26, 2026, 5:35 pm
தென்கிழக்கு ஆசிய தொடக்கக் கற்றல் ஆய்வு; எழுத்துத் திறனில் மலேசியா முதலிடம்: கல்வியமைச்சு
March 26, 2026, 5:34 pm
புதிய அரச மன்னிப்பு மனுவை டத்தோஶ்ரீ நஜிப் தாக்கல் செய்யவில்லை: ஷாபி
March 26, 2026, 5:34 pm
சீபீல்டு ஆலயம் தொடர்பில் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட வேண்டாம்: பாப்பாராயுடு
March 26, 2026, 5:02 pm
