நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதிய அரச மன்னிப்பு மனுவை டத்தோஸ்ரீ நஜிப் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

கோலாலம்பூர்:

சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியத்திடம் ஒரு புதிய அரச மன்னிப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

இந்த மனு கடந்த ரமலான் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் நகல் இஸ்தானா நெகாராவுக்கு அனுப்பப்பட்டதாக அந்தத் தகவல் தெரிவித்தது.

இந்த மனுவானது எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கை உள்ளடக்கியதா, 1எம்டிபி வழக்கை உள்ளடக்கியதா அல்லது இரண்டையும் உள்ளடக்கியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் அது அனைத்து குற்றவியல் குற்றங்களிலிருந்தும் டத்தோஸ்ரீ நஜிப்பை விடுவிக்கக் கோருகிறது.

இந்த விஷயத்தை உறுதி செய்யுமாறு, நஜிப்பின்  வழக்கறிஞர் பர்ஹான் ஷாபியிடம் கேட்ட போது அப்படிப்பட்ட எந்த மனுவைப் பற்றியும் தனக்குத் தெரியாது என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset