செய்திகள் மலேசியா
பாதுகாப்பு பணம் கேட்டதாகக் கூறும் காணொலி குறித்து போலிசில் புகார் அளிக்க ஹன்னா இயோ உத்தரவு
கோலாலம்பூர்:
குடியிருப்பாளர்கள் பிரதிநிதி மன்ற உறுப்பினர் ஒருவர் உடம்பு பிடி மைய நடத்துனரிடம் பாதுகாப்புப் பணம் கேட்டதாகக் கூறும் வைரல் காணொளி தொடர்பாக, கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ போலிஸ் நிலையத்தில் புகார் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
காணொளியில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய, உடனடியாக விசாரணை தொடங்கப்பட வேண்டும்.
குற்றச்சாட்டுகள் உண்மையாக நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட உறுப்பினர் எந்தவித சமரசமும் இன்றி உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.
எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. எந்தவிதமான பாதுகாப்புப் பணத்திற்கோ அல்லது இடைத்தரகர்களின் நடைமுறைக்கோ சகிப்புத்தன்மை இல்லை என்று ஹன்னா இயோ முகநூல் பதிவில் கூறினார்.
என்னை பொறுத்தவரை, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான விஷயங்களில் எந்த விதமான பாதுகாப்புப் பணத்தையோ அல்லது இடைத்தரகர்களின் பயன்பாட்டையோ அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது.
தகவல்களைத் தெரிவிக்கவோ அல்லது புகார்களை அளிக்கவோ பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 12:38 pm
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினரின் ஈடுபாட்டிற்கு விக்டர் சின்னிடம் ஆதாரம் இருக்கலாம்: ரபிசி நம்பிக்கை
March 26, 2026, 12:16 pm
டீசல் விலை உயர்வு: லங்காவி படகுச் சேவைகள் அதிரடியாகக் குறைப்பு
March 26, 2026, 12:14 pm
வறட்சி நீங்கப் பிரார்த்தனை: அராவ் அரண்மனையில் 1,000 பேர் பங்கேற்ற 'அல்-இஸ்திஸ்காராஹ்' தொழுகை
March 26, 2026, 12:13 pm
கூட்டு முயற்சியால் விளைந்த அற்புதம்: கலைநயத்துடன் மிளிரும் 'ஸ்ரீ பெரந்தாவ்' அடுக்குமாடி குடியிருப்பு
March 26, 2026, 12:13 pm
சீன மயானத்தில் பாலியல் ரீதியில் அநாகரிகச் செயல்களில் ஈடுபட்ட ஜோடிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை
March 26, 2026, 12:12 pm
பெருநாள் பயண அலை: பட்ஜெட் ஹோட்டல்களின் தங்குமிட விகிதங்கள் அதிகரிப்பு
March 26, 2026, 12:11 pm
அம்பாங்கில் குப்பைத் தொட்டியிலிருந்து பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
March 26, 2026, 12:09 pm
தேசிய முன்னணியில் நீடிப்பதற்கான மஇகாவின் முடிவு தொலைநோக்குடையது: ஜம்ரி
March 26, 2026, 12:07 pm
