நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியில் நீடிப்பதற்கான மஇகாவின் முடிவு தொலைநோக்குடையது: ஜம்ரி

கோலாலம்பூர்:

தேசிய முன்னணியில் நீடிப்பதற்கான மஇகாவின் முடிவு, ஒரு தெளிவான, தொலைநோக்குடைய நகர்வு.

மேலும் அது பிளவுபடுத்தும் அரசியலை நிராகரிக்கிறது என்று தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் கூறினார்.

மஇகா மத்திய செயற்குழு எடுத்த இந்த முடிவு, தற்போதைய அரசியல் நிலைப்பாடு மட்டுமல்ல, மாறாக தேசிய முன்னணி மூலம் வலுப்படுத்துகிறது.

மேலும் கூட்டணி தொடங்கிய காலத்திலிருந்தே இருந்துவரும் ஒத்துழைப்பின் நீண்டகால வரலாற்று வேர்களைப் பிரதிபலிப்பதாகும்.

தற்போதைய நிச்சயமற்ற சூழலில் அரசியல் நிலைத் தன்மைக்கான தேவை உட்பட, பல முக்கிய நியாயங்களின் அடிப்படையிலும் மஇகாவின் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நீண்ட காலமாகச் சோதிக்கப்பட்டதும், இந்த நாட்டில் சமூக நல்லிணக்கம் தொடர்ந்து பேணப்படுவதை உறுதி செய்வதில் முக்கியமானதுமான பல்லின ஒத்துழைப்பின் ஒரு முன்மாதிரியாக தேசிய முன்னணி திகழ்கிறது.

பல்வேறு சவால்களால் சோதிக்கப்பட்ட போதிலும் தேசிய முன்னணி தேங்கி நிற்கவில்லை.

அது மறுசீரமைப்பு, அமைப்பை வலுப்படுத்துதல், இன்றைய மக்களின் தேவைகளுக்கு மேலும் பதிலளிக்கும் வகையில் தனது அணுகுமுறையைப் புதுப்பித்தல் ஆகிய செயல்முறைகளில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக இது பிளவுபடுத்தும் அரசியலை நிராகரிக்கிறது என்று ஜம்ரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset