நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன

சுங்கைப்பட்டாணி:

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன.

இங்குள்ள மெர்போக், கம்போங் பெலாவ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று நள்ளிரவில் இவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

65, 53 வயதுடைய கணவன், மனைவி,  அவர்களது 29 வயது மகன் ஆகியோரின் சடலங்களை போலிஸ் அதிகாரிகளும் கிராம மக்களும் கண்டெடுத்ததாகத் தெரிய வருகிறது.

மூன்று குழந்தைகளின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டார் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டன.

இதனிடையே மெர்போக் போலிஸ் நிலையத்தில், கோலா மூடா மாவட்ட போலிஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துவார் என கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset