செய்திகள் மலேசியா
நான் இன்னும் கேசியோ கைக்கடிகாரம் தான் அணிந்திருக்கிறேன்: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
பெருநிறுவன மாபியா ஊழல் வழக்கில் தொழிலதிபர் விக்டர் சின்னிடம் இருந்து 10 மில்லியன் ரிங்கிட் ரொக்கமாகக் கேட்கப்பட்டதாகக் கூறப்படும் கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் தான் இல்லை.
தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இதனை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
எனது கையில் இன்னும் கேசியோ கைக்கடிகாரம் அணிந்திருப்பதைக் காட்டியவாறே, அந்தக் குற்றச்சாட்டை நக்கலாக அவர் நிராகரித்தார்.
நிச்சயமாக அது நான் இல்லை. நான் இன்னும் கேசியோ கைக்கடிகாரம்தான் அணிந்திருக்கிறேன். என்னிடம் எந்தத் தகவலும் இல்லை.
ஒரு பெருநிறுவன மாபியா ஊழலில் சிக்கியிருந்த விக்டரின் கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக அந்த ஊழலைத் தீர்ப்பதற்காக ஒரு கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் தன்னிடம் 10 மில்லியன் ரிங்கிட் ரொக்கமாகக் கேட்டதாக விக்டர் சின் கூறியிருந்தார்.
ஆரம்பக் கட்டத்தில் தாம் 9.5 மில்லியன் ரிங்கிட் மட்டுமே வழங்கியதாகவும், பிரச்சினை தீர்க்கப்படாததால் மீதமுள்ள 500,000 ரிங்கிட் நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் விக்டர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 7:02 pm
பாசார் செனியில் 12 வயது சிறுவன் மீது கொடூரத் தாக்குதல்
March 25, 2026, 6:09 pm
நாம் அமைதியாக இருந்தால், மக்கள் அதை உண்மை என்று நினைப்பார்கள்: டத்தோஶ்ரீ ரமணன்
March 25, 2026, 6:08 pm
மேற்கு ஆசிய மோதல்; போர்நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை மலேசியா வலியுறுத்துகிறது: முஹம்மது ஹசான்
March 25, 2026, 6:07 pm
பெருநிறுவன மாபியா விவகாரம்; சட்ட அமலாக்க அமைப்பில் சதி உள்ளது: ரபிசி
March 25, 2026, 6:06 pm
விக்டர் சின் எங்கே இருக்கிறார் என்பது அதிகாரிகளுக்கு தெரியும்: சைபுடின் நசுதியோன்
March 25, 2026, 4:21 pm
கடும் வெயிலால் நீடிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு: செபாட்டிக் தீவில் அவசரநிலை அறிவிப்பு
March 25, 2026, 4:19 pm
'ஹர்ராஸ் கும்பல்' அதிரடியாகக் கைது: திருடுபோன பல வாகனங்களை மீட்டது மலாக்கா போலிஸ்
March 25, 2026, 4:09 pm
'ஓப்ஸ் பந்தாவ்' அதிரடி சோதனை: 3,800-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்
March 25, 2026, 4:05 pm
