நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

'ஓப்ஸ் பந்தாவ்' அதிரடி சோதனை: 3,800-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்

கோலாலம்பூர்: 

மலேசியா முழுவதும் கடந்த மார்ச் 20-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்ட 'ஓப்ஸ் பந்தாவ்' (Ops Pantau) அதிரடி சோதனையில், இதுவரை 3,827 வெளிநாட்டினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் இடங்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையானது, நாட்டின் சட்டதிட்டங்கள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மலேசியக் குடிவரவுத் துறைத் தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் பெருநாள் காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்தச் சோதனைகள் மிகவும் கண்ணியமான முறையிலும் தொழில்முறைத் தரத்துடனும் நடத்தப்படுவதை குடிவரவுத் துறை உறுதி செய்துள்ளது. 

தனது குடும்பத்தைப் பிரிந்து தங்கியிருக்கும் வெளிநாட்டினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் அதே வேளையில், பொது இடங்களில் நிலவும் அசௌகரியங்களைக் குறைக்கவும், உள்ளூர் மக்களின் அச்சத்தைப் போக்கவும் முறையான திட்டமிடலுடன் இச்சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த அமலாக்க நடவடிக்கைகள் வெறும் பண்டிகைக் காலத்திற்காக மட்டும் நடத்தப்படுபவை அல்ல என்றும், சட்டமீறல்கள் எந்த நேரத்திலும் நிகழலாம் என்பதால் குடிவரவுத் துறை அதிகாரிகள் எப்போதும் விழிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் டத்தோ ஜகாரியா குறிப்பிட்டார். 

உளவுத் தகவல்களின் அடிப்படையில், முறையான வழிமுறைகளைப் பின்பற்றி (SOP) நடத்தப்படும் இந்த 'ஓப்ஸ் பந்தாவ்' நடவடிக்கை, நாட்டின் பாதுகாப்பையும் சமூக நல்லிணக்கத்தையும் பேணுவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset