நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாகனத்துக்குள் பாய்ந்த பட்டாசு: 18 மாத குழந்தை நூலிழையில் உயிர் தப்பியது

கோலா நேருஸ்: 

வாகனத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த குடும்பம் ஒன்று பட்டாசு சம்பவத்தில் உயிர் தப்பிய அதிர்ச்சி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 38 வயதான ரஷிதி இஷாக் கூறுகையில், வாகனத்துக்குள் பாய்ந்த பட்டாசு முதலில் தனது கையில் பட்டதால் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை நோன்பு திறந்து தொழுகை முடித்த பின்னர் இரவு 9 மணியளவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, வாகன ஜன்னலை திறந்திருந்த நிலையில் பட்டாசு துகள்கள் திடீரென உள்ளே புகுந்தன. அது அவரது இடது கையில் பட்டதுடன் பின்னர் கண்ணாடி மீது மோதித் வெடித்து முன் கண்ணாடி சேதமடைந்தது.

அந்த நேரத்தில், 18 மாத குழந்தை மனைவியின் மடியில் இருந்ததாகவும், பட்டாசு கையில் படாமல் இருந்தால் நேரடியாக குழந்தையின் முகத்தைத் தாக்கியிருக்கும் எனவும் அவர் கூறினார். மேலும், வாகனத்தின் பின்பக்கத்தில் இருந்த 4, 8, 9 வயதுடைய மூன்று குழந்தைகளும் பாதுகாப்பாக இருந்தனர்.

இந்த சம்பவத்தில் அவரது கையில் லேசான காயம் ஏற்பட்டது. சாலையோரங்களில் பட்டாசு வெடிப்பது மிகவும் ஆபத்தானது என்றும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் மட்டுமே பட்டாசு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். 

அவர் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்றாலும், மற்றவர்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தாத வகையில் அனைவரும் பொறுப்புடன் நடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset