நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெப்பமான காலநிலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: பகாங் சுல்தான்

குவாந்தான்:

தற்போதைய வெப்பமான, வறண்ட வானிலை காரணமாக, மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்.

திறந்தவெளியில் தீ மூட்டுவதில் ஈடுபடக்கூடாது என்றும் பகாங் மாநில சுல்தான், அல்- அப்துல்லாஹ் ரியாதுத்தீன் இதனை கேட்டுக் கொண்டார்.

இன்று பகாங் அரண்மனை முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு பதிவில், 
வெப்பநிலை அதிகரிப்பு, வறண்ட சூழலில் தீ விபத்து ஏற்படும் அபாயம் காரணமாக தற்போதைய வானிலை நிலவரங்களுக்கு தீவிர கவனம் தேவை.

பொதுமக்கள் எப்போதும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும்.

பிற்பகலில் வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்க வேண்டும்.

குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் போன்ற ஆபத்தில் உள்ள குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று  அவர் கூறினார்.

கட்டுப்பாடற்ற தீயை உண்டாக்கி, காற்றின் தரத்தைப் பாதிக்கக்கூடிய குப்பை, காய்ந்த இலைகள் அல்லது தோட்டக் கழிவுகளை எரிப்பது உள்ளிட்ட திறந்தவெளி எரிப்புச் செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என அல்-சுல்தான் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset