செய்திகள் மலேசியா
ஆலயங்களையும் அவற்றின் பிரச்சனைகளையும் கண்டறிய பினாங்கு மாநிலத்திற்கு மஹிமா பயணம்: டத்தோ சிவகுமார்
சிம்பாங் அம்பாட்:
ஆலயங்களையும் அதன் பிரச்சனைகளையும் கண்டறிய பினாங்கு மாநிலத்திற்கு மஹிமா பயணத்தை மேற்கொண்டுள்ளது.
மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.
ஆலயங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் அதில் உள்ள சிக்கல்களை தீர்வு காண்பதற்கான முயற்சிகளை அடையாளம் காணும் நோக்கில் மஹிமா நாடு முழுவதும் பயணங்களை மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இந்தப் பயணம் தற்போது பினாங்கு மாநிலத்தில் தொடர்கிறது.
இன்றைய தினம் நாங்கள் மாநிலத்தில் உள்ள ஆலய நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும்.
இதற்கு முன்னதாக சிம்பாங் அம்பாட்டில் உள்ள ஸ்ரீ மகா மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் நான் கலந்து கொண்டேன்.
ஆலயத் தலைவர் கலைமணி அழைப்பின் பேரில் இந்த பூஜையில் நான் கலந்து கொண்டேன்.
சிறப்பு பூஜைகளுக்கு பின் ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.
இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2026, 1:20 pm
இணையதளம் முதலீட்டு மோசடி: RM3.5 லட்சம் ரிங்கிட்டை இழந்த 34 வயது ஆடவர்
March 22, 2026, 12:57 pm
வியர்வை சிந்தி உழைத்தால் மட்டுமே விவசாயத்தில் வெற்றி பெற முடியும்: டத்தோ டி. மோகன்
March 22, 2026, 10:58 am
பினாங்கில் நிலவரி சர்ச்சை: அறிக்கை தயாரிக்கும் முதலமைச்சர் சௌ கோன் இயோவ்
March 22, 2026, 10:37 am
ஜார்ஜ்டவுனில் பட்டாசு விற்பனைக் கடை தீயில் சாம்பல்
March 22, 2026, 10:32 am
நோன்பு பெருநாள் போக்குவரத்து அதிகரித்ததால் சாலை விபத்துகளில் 26 பேர் மரணம்
March 22, 2026, 10:28 am
