நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியாவில் உள்ள முஸ்லிம்கள் நாளை நோன்பு பெருநாளை கொண்டாடுகிறார்கள்

சிங்கப்பூர்:

சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியாவில் உள்ள முஸ்லிம்கள் நாளை நோன்பு பெருநாளை  கொண்டாடுகிறார்கள்.

புரூணை, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் மத விவகார அமைச்சர்கள் ஒப்புக்கொண்ட இம்மாங்குர் ருக்யாவுக்கான அளவுகோல்களின் அடிப்படையில், வியாழன் அன்று சூரியன் மறையும் போது சிங்கப்பூர் அடிவானத்தில் சியாவால் பிறை மிகவும் குறைவாக இருந்ததால் அதைக் காண முடியவில்லை என்று சிங்கப்பூர் முஃப்தி டாக்டர் நசிருதீன் முகமட் நசீர் கூறினார்.

இதன் பொருள், சிங்கப்பூரில் எங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை 30 நாள் ரமலான் மாதம் நிறைவடைகிறது.

மேலும் ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டிற்கான ஷவ்வால் மாதத்தின் தொடக்கம் நாளை மார்ச் 21, சனிக்கிழமை அன்று வருகிறது என்று அவர் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளிக் காட்சியில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset