நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் அவசரம் வேண்டாம்; விவேகமாக இருங்கள்: பகாங் சுல்தான்

பெந்தோங்:

சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் அவசரம் வேண்டாம் என பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் வலியுறுத்தினார்.

மக்கள், குறிப்பாக ஹரி ராயா பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் செல்பவர்கள், சாலைகள் அல்லது நெடுஞ்சாலைகளில் எப்போதும் பொறுமையாகவும் கவனமாக இருக்க வேண்டும்.

காரணம் தற்போது, பல முக்கிய வழித்தடங்களில் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பெருநாளை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியதால், நேற்று முதல் கிளாங் பள்ளத்தாக்கிலிருந்து கிழக்குக் கடற்கரையை நோக்கிச் செல்லும் போக்குவரத்து நெரிசலைக் கவலையுடன் வான்வழியாக ஆய்வு செய்ய சுல்தான் இதனை தெரிவித்தார்.

நீண்ட பயணங்களின் போது ஏற்படும் மன அழுத்தம் மற்றும் சோர்வைத் தவிர்ப்பதற்காக, சாலைப் பயனாளர்கள் வாகனம் ஓட்டும்போது எப்போதும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தங்கள் பயணங்களை நன்கு திட்டமிட வேண்டும்.

அனைத்து சாலைப் பயனாளர்களும் பொறுமையுடன் இருக்கவும், போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்கவும், தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு வாகனங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் தங்கள் இலக்கைப் பாதுகாப்பாகச் சென்றடைய, பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset