நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்டாசு வெடித்த போது நிகழ்ந்த விபத்த்தில் இளைஞர் பலத்த காயங்களுக்கு இலக்கானார்

சிரம்பான்:

கடந்த  மார்ச் 12ஆம் தேதி போர்ட்டிக்சன் லுக்குட் பகுதியில் பட்டாசுகளை வெடித்த 17 வயது இளைஞர் ஒருவருக்கு, இரு செவிப்பறைகளும் சிதைந்ததுடன் மூக்கு முறிவு உள்ளிட்ட பலத்த காயங்கள் ஏற்பட்டன.

பாதிக்கப்பட்டவருக்கு விரல்கள், உள்ளங்கைகளில் காயங்களும், முகத்தில் சிறிய காயங்களும் ஏற்பட்டதாக நெகிரி செம்பிலான் போலிஸ் தலைவர் அல்சாஃப்னி அஹ்மத் தெரிவித்தார்.

நேற்று மாலை 6.17 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து போர்ட் டிக்சன் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.

மார்ச் 12 அன்று இரவு சுமார் 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவரும் அவரது நண்பர்களும் சுமார் 20 பட்டாசுகளை வெடித்ததாகவும்,

மேலும் ஒரு வலுவான வெடிப்பை ஏற்படுத்துவதற்காக, கம்பத்தில் உள்ள துளைக்குள் கந்தகத்தைத் தூவி ஒரு பட்டாசை வெடித்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் லைட்டரைப் பற்றவைக்க முயன்றபோது, ​​ஒரு வலுவான வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதன் விளைவாக அவர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset