நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தா திங்கியில் பயங்கர விபத்து

கோத்தா திங்கி:

ஜொகூர் பாரு-மெர்சிங் சாலையின் கிலோமீட்டர் 77.3-இல் இன்று நடந்த இரண்டு கார் மோதல் விபத்தில் ஒரு தம்பதியினர் உயிரிழந்தனர். வாகனங்களில் ஒன்று எதிர்வரும் பாதைக்குள் அத்துமீறிச் சென்றதே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர், சூப்பரிண்டென்டன்ட் யூசோப் ஒத்மான், இறந்த தம்பதியினர் 26 வயதான உள்ளூர் இளைஞர் ஓட்டிய நிசான் சென்ட்ராவில் பயணம் செய்து கொண்டிருந்தனர் என்றும், நான்கு உடன்பிறப்புகளை ஏற்றிச் சென்ற புரோட்டான் சாகாவுடன் மோதும் முன் எதிரே இருந்த பாதைக்குத் திரும்பியதாகவும் தெரிவித்தார்.

"இந்த விபத்து குறித்து காலை 9.45 மணிக்கு பொதுமக்களிடமிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அந்த நிசான் சென்ட்ராவை 26 வயதான உள்ளூர் இளைஞர் ஓட்டி வந்துள்ளார், அவருடன் அவரது 25 வயது காதலி பயணித்துள்ளார்.

"அந்தப் புரோட்டான் சாகாவை, 23 வயது உள்ளூர் பெண் ஓட்டி வந்துள்ளார். அவருடன் 16 முதல் 21 வயதுக்குட்பட்ட மூன்று ஆண் பயணிகளும் இருந்தனர், அவர்களும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள்.

"அந்த நிசான் சென்ட்ரா மெர்சிங்கிலிருந்து ஜொகூர் பாருவுக்குச் சென்று கொண்டிருந்தது, அதே நேரத்தில் புரோட்டான் சாகா, பாசிர் குடாங்கிலிருந்து பஹாங்கில் உள்ள குவாந்தானுக்குச் சென்று கொண்டிருந்தது," என்று அவர் இன்று ஒரு வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

நெற்றியில், உடலில் காயமடைந்த நிசான் சென்ட்ராவின் ஓட்டுநரும் முன்பக்கப் பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று யூசுப் தெரிவித்தார்.

விசாரணை நடவடிக்கைகளுக்காக உடலானது பின்னர் இங்குள்ள கோத்தா திங்கி மருத்துவமனையின் (HKT) தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

"புரோட்டான் சாகாவில் பாதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக HKT-க்கு கொண்டு செல்லப்பட்டார்," என்று அவர் தெரிவித்தார்.

1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் இந்த வழக்கு இன்னும் காவல்துறை விசாரணையில் உள்ளது என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், சாலைகளில் அனைவரின் பாதுகாப்பிற்காகவும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் சட்டத்தை மதிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று யூசுப் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில், உயிரிழந்தவர் பி. பிரியங்கா என அடையாளம் காணப்பட்டார், அவருடன் இருந்தவரின் விவரங்கள் தெரியவில்லை.

இதற்கிடையில், புரோட்டான் சாகாவில் இருந்தவர்கள் அனைவரும் சகோதர சகோதரிகள் எனத் தெரியவந்துள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset