நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடும்ப வன்முறை: கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய கணவர் கைது

மலாக்கா:

ஜாசின், தாமான் ஸ்ரீ கெமெண்டோர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்துத் தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் 22 வயது இளைஞரை மலாக்கா காவல்துறை இன்று கைது செய்தது. 

மலாக்கா மாநிலக் காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் அடங்கிய குழுவினர், இன்று காலை 11 மணியளவில் இந்த அதிரடிச் சோதனையை மேற்கொண்டு சந்தேக நபரைத் தடுத்து வைத்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோத்தா ஷபண்டாரில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்துப் புகார்கள் எழுந்தன. இச்சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த நபரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக மலாக்கா மத்திய மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் உறுதிப்படுத்தியுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாகப் பொதுமக்கள் ஏதேனும் தகவல்களை அறிந்திருந்தால், அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்டக் காவல்துறை தலைமையகத்திலோ தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

தற்போது இந்த வழக்கு, தண்டனைச் சட்டத்தின் 323-வது பிரிவு, 1994-ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டத்தின் 18A பிரிவின் கீழ் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. 

அதேவேளையில், இந்தச் சம்பவம் குறித்துப் பொதுமக்களிடையே வீண் வதந்திகளையோ பரப்ப வேண்டாம் என்றும், அது காவல்துறையின் விசாரணைக்கு இடையூறாக அமையும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset