செய்திகள் மலேசியா
நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையில் டீசல் விற்பனை பொருத்தமற்றது: ஹம்சா
கோலாலம்பூர்:
நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையில் டீசல் விற்பனை செய்யப்படுவது பொருத்தமற்றது.
எதிர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை கூறினார்.
ஒரு லிட்டர் டீசல் விலை 80 சென் உயர்ந்து 4.72 ரிங்மிட்டாக அதிகரித்ததற்கு வருத்தமளிக்கிறது.
பெருநாள் பண்டிகைக்கு முன்னதாக, நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த இந்த விலை உயர்வு பொருத்தமற்றது.
இந்த விலை உயர்வால், குறிப்பாகப் போக்குவரத்துச் செலவுகளில் தொடர் விளைவுகள் ஏற்படும்.
அது பொருட்களின் விலைகளையும் உயர்த்தும்.
முஸ்லிம்கள் பெருநாள் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகும் இவ்வேளையில், பிரதமர் மக்களின் மனநிலையை உணராதவராக இருக்கிறார் என்பதை இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காட்டுகின்றன என்று அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 9:51 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அலைபோல் திரண்ட வாகனங்களினால் நிரம்பிய முக்கிய நெடுஞ்சாலைகள்
March 19, 2026, 9:49 pm
நிச்சயமற்ற சூழலில் செலவு செய்யும் போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
March 19, 2026, 9:48 pm
கோத்தா திங்கியில் பயங்கர விபத்து
March 19, 2026, 9:47 pm
புக்கிட் டாமன்சாராவில் மினி கேசினோவை நடத்தி வந்த கும்பல் முறியடிக்கப்பட்டது: போலிஸ்
March 19, 2026, 9:47 pm
"ஒற்றுமையே நாட்டின் பலம்": மலாய்-இந்திய சமூகத்தின் பேச்சுவார்த்தையைப் பாராட்டிய பிரதமர்
March 19, 2026, 9:45 pm
மீண்டும் பிரதமரானார் அனுதின்: மலேசியப் பிரதமர் வாழ்த்து
March 19, 2026, 8:20 pm
