நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் டாமன்சாராவில் மினி கேசினோவை நடத்தி வந்த கும்பல் முறியடிக்கப்பட்டது: போலிஸ்

கோலாலம்பூர்:

புக்கிட் டாமன்சாராவில் மினி கேசினோவை நடத்தி வந்த கும்பலை போலிசார் முறியடித்துள்ளனர்.

கோலாலம்பூர் போலிஸ் தலைவர் ஃபாடில் மார்சஸ் இதனை தெரிவித்தார்.

நேற்று புக்கிட் டாமன்சாராவில் நடத்தப்பட்ட சோதனையில், மினி கேசினோ சூதாட்டக் கும்பல் முறியடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, ஹாங்காங் நாட்டவர் உட்பட நான்கு பேரை போலிசார் கைது செய்தது.

கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறையின் டி7 பிரிவினர், ஜாலான் கெலெங்காங்கில் உள்ள ஒரு அலுவலக வளாகத்தில், பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் இந்தச் சோதனையை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில், 27 முதல் 49 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர்.

விசாரணையில், இந்தக் கும்பல் மினி-கேசினோ வகை சூதாட்டத்தை நிர்வகித்து, ஒழுங்கமைத்து, ஊக்குவிப்பது தெரியவந்துள்ளது.

இந்தச் செயல்பாடுகளை ஊக்குவிக்க அவர்கள் இணையதளங்களையும் சமூக ஊடகத் தளங்களையும் பயன்படுத்துகிறார்கள்  என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset