செய்திகள் மலேசியா
அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது: பிரதமர்
புத்ராஜெயா:
அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது.
இன்று மாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியபோது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவில் மோசமடைந்து வரும் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து எங்கள் கலந்துரையாடல் அமைந்தது.
குறிப்பாக, அமைதி, நிம்மதிக்கு உரியதாக இருக்க வேண்டிய ரமலான் மாதத்தில் இந்த நிலை மேலும் மோசமடைகிறது.
அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் குண்டுவீச்சு, படுகொலையைக் கண்டிப்பதில் மலேசியாவின் உறுதியான, நிலையான நிலைப்பாட்டை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
போர் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த அழைப்பு விடுக்கவும், அமைதி, ராஜதந்திரம், ஆரோக்கியமான உரையாடலின் குரலை நிலைநிறுத்த முயற்சிகளைத் திரட்டவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம் என்று பிரதமர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபை, பிரிக்ஸ் உட்பட அனைத்து சர்வதேச அரங்கங்களிலும் மலேசியாவும் இந்தியாவும் கைகோர்த்து தங்கள் கூட்டுக்குரலை வலுப்படுத்த வேண்டும் என்று தானும் தனது சகாவான மோடியும் ஒப்புக்கொண்டதாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 9:49 pm
நிச்சயமற்ற சூழலில் செலவு செய்யும் போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
March 19, 2026, 9:48 pm
நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையில் டீசல் விற்பனை பொருத்தமற்றது: ஹம்சா
March 19, 2026, 9:48 pm
கோத்தா திங்கியில் பயங்கர விபத்து
March 19, 2026, 9:47 pm
புக்கிட் டாமன்சாராவில் மினி கேசினோவை நடத்தி வந்த கும்பல் முறியடிக்கப்பட்டது: போலிஸ்
March 19, 2026, 9:47 pm
"ஒற்றுமையே நாட்டின் பலம்": மலாய்-இந்திய சமூகத்தின் பேச்சுவார்த்தையைப் பாராட்டிய பிரதமர்
March 19, 2026, 9:45 pm
மீண்டும் பிரதமரானார் அனுதின்: மலேசியப் பிரதமர் வாழ்த்து
March 19, 2026, 8:20 pm
ஷவ்வால் பிறை தென்படவில்லை; சனிக்கிழமை நோன்பு பெருநாள்
March 19, 2026, 4:09 pm
