செய்திகள் மலேசியா
ஆலயம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிப்பு; இந்தியத் தலைவர்கள் ஒன்றிணைய நேரம் வந்து விட்டது: குணராஜ் வலியுறுத்து
கோலாலம்பூர்:
சமுதாயத்தின் நலன் கருதி இந்திய தலைவர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை வலியுறுத்தினார்.
நாட்டில் ஆலயம் தொடர்பான பிர்ச்சினைகள் தொடர்ந்து ஒரு சர்ச்சையாக இருந்து வருகிறது.
இனம், மதம் தொடர்பான விவகாரங்களில் ஒரு சிலர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இருந்தாலும் இப்பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.
காரணம், நாடு முழுவதும் பல ஆலயங்கள் தற்போது பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளது.
இப்பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காணவில்லை என்றால் வரும் காலங்களில் இன்னும் பல விபரீதங்களை ஏற்படுத்தலாம்.
ஆக, இந்த ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண இந்தியத் தலைவர்கள் ஒன்றிணைய நேரம் வந்து விட்டது.
இனியும் கட்சி உட்பட பல பேதங்களை நாம் பார்த்துக் கொண்டால் அது நம் சமுதாயத்திற்கும் தான் பாதிப்பு என்று அவர் தெரிவித்தார்.
காரணம் மற்ற சமுகத்தினத்தினர் பல வாரியாக பிரிந்து கிடந்தாலும் ஒரு பிரச்சினை என்று வந்து விட்டால் அனைவரும் ஒன்றாகி விடுகின்றனர்.
இந்த மன போக்கு நம் சமூகத்திலும் வர வேண்டும் என குணராஜ் கேட்டு கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 8:20 pm
ஷவ்வால் பிறை தென்படவில்லை; சனிக்கிழமை நோன்பு பெருநாள்
March 19, 2026, 4:09 pm
மீண்டு எழவும், ஆதரவை மீண்டும் பெறவும் அம்னோவுக்கு வலுவான அடித்தளம் உள்ளது: கைரி
March 19, 2026, 4:07 pm
ஜம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டது; சட்ட விதிகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டது: ஐஜிபி
March 19, 2026, 4:03 pm
மலேசியர்களின் மகிழ்ச்சிக்கு இதுதான் ரகசியமா?: இப்சோஸ் (Ipsos) ஆய்வில் வெளியான உண்மைகள்
March 19, 2026, 3:58 pm
சட்டவிரோதக் கோயில்கள் விவகாரத்தில் இனவாதத் தீயைப் பரப்பாதீர்கள்: ஐஜிபி
March 19, 2026, 3:58 pm
பொழுதுபோக்கு மையத்தில் சண்டையிட்ட நான்கு பேருக்கு தலா RM750 அபராதம்
March 19, 2026, 3:55 pm
