நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷவ்வால் பிறை தென்படவில்லை; சனிக்கிழமை நோன்பு பெருநாள்

கோலாலம்பூர்:

ஷவ்வால் பிறை  இன்று தென்படாததால் நாளை மறுநாள் மார்ச் 21 ஆம் தேதி  சனிக்கிழமை நோன்புப் பெருநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

அரச முத்திரைக் காப்பாளர் டான்ஶ்ரீ செய்யத் டேனியல் செய்யத் அஹ்மத் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நோன்பு பெருநாள் வரும் சனிக்கிழமையன்று கொண்டாடப்படும்.

நாடு முழுவதும் 29 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளைத் தொடர்ந்து, இன்று மாலை ஷவ்வால் மாதத்தின் பிறை தென்படவில்லை.

இதன் அடிப்படையில் ஆட்சியாளர்களின் ஒப்புதலுடன்,

மலேசியாவின் அனைத்து மாநிலங்களிலும் நோன்பு பெருநாள் மார்ச் 21, சனிக்கிழமை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை இதன்மூலம் நான் அறிவிக்கிறேன்  என்று அவர் தொலைக்காட்சி ஒளிபரப்பில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset