செய்திகள் மலேசியா
தந்தை கண்முன்னே மகனை முதலை இழுத்துச் சென்ற துயரம்
கினபத்தாங்கான்:
கம்போங் செகாலியுட் பகுதியில் உள்ள ஆற்றில், தந்தை கண்முன்னே மகன் முதலை தாக்குதலுக்கு உள்ளாகி இழுத்துச் செல்லப்பட்ட பரிதாப சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது.
28 வயதான ரைய்யான் அப்துல்லாவை இறால் பிடிக்க வலை வீசிக் கொண்டிருந்தபோது முதலை தாக்கியுள்ளது என்று கினபத்தாங்கான் தீயணைப்பு, மீட்பு நிலைய தலைவர் ஹைரி ஒத்தூ தெரிவித்துள்ளார்.
“சம்பவ இடத்தில் இருந்த அவரது தந்தை இந்தத் தாக்குதலை நேரில் பார்த்துள்ளார். இரவு 8.22 மணிக்கு சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது,” என அவர் இன்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
மீட்பு குழுவினர் இரவு 9.10 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்து தகவல்கள் சேகரித்து உடனடியாக தேடுதல், மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
இன்று காலை வரை பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்படவில்லை. தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 10:48 am
கோலாலம்பூரில் அதிரடி சோதனை: போலி கடிகார விற்பனைக்கு முற்றுப்புள்ளி
March 18, 2026, 10:34 am
மாநில பலம் போதாது, தேசிய வெற்றி அவசியம்: இஸ்கண்டார்
March 18, 2026, 10:29 am
இந்தியா விசா கட்டுப்பாடுகள்: வங்காளதேச நோயாளிகளை இலக்காகக் கொண்ட மலேசியா
March 18, 2026, 10:28 am
துன் டாக்டர் மஹாதீர் மீண்டும் அம்னோவில் சேர விரும்பினாலும் வரவேற்கப்படும்: அஹ்மத் மஸ்லான்
March 18, 2026, 9:53 am
ரந்தாவ் பஞ்சாங் எல்லையில் திரளும் வாகனங்கள்: ஹரிராயாவை முன்னிட்டு கடும் நெரிசல்
March 18, 2026, 6:14 am
