நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் சாலைகளைப் பராமரிக்க அதிக நிதி தேவை: ஹன்னா யோ

கோலாலம்பூர்:

அதிக போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள கோலாலம்பூர் மாநகரின் சாலைகளைப் பராமரிக்க அதிக நிதி தேவைப்படுவதாக அமைச்சர் ஹன்னா யோ கூறினார்.

மற்ற மாநிலங்கள் போல, மலேசிய சாலை பதிவுக் தகவல் அமைப்பு (MARRIS) மூலம் ஆண்டுதோறும் நிதி பெறுவதற்குப் பதிலாக, கூட்டாட்சி அரசாங்கத்திலிருந்து கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL) நேரடியாக RM33 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

“இது போதாது, ஏனெனில் தினசரி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட வாகனங்கள் நகருக்குள் நுழைகின்றன, இதனால் சாலைகள் மிகுந்த அழுத்தத்தில் இருக்கின்றன,” என்று அவர் மார்ச் 16 திங்கட்கிழமை கூறினார்.

ஹன்னா யோ இந்தப் பிரச்சனையை தேசிய நிதி கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் எழுப்பியுள்ளதாக குறிப்பிட்டார்.

முன்னதாக, ஹன்னா யோ நகர மெயர் டத்தோ ஸ்ரீ  ஃபாட்லுன் மாக் உஜுட், புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபாங் குய் லூன் உடன் இணைந்து புது ஹாங் துவா பொதுத்தொழிலாளர் குடியிருப்புப் பிராஜெக்ட் (Pudu) பார்வையிட்டார். 

 DBKL சமீபத்தில் அந்த குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள சாலைகளில் நிறைவேற்றிய மறுசீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக அவர் அங்குச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நகர மெயர் தத்துக் ஸெரி ஃபாட்லுன் மாக் உஜுட் தெரிவித்ததாவது, DBKL தனது நிர்வகிப்பில் உள்ள 51 பொதுத்தொழிலாளர் (PA), மக்களுக்கான குடியிருப்பு திட்டங்கள் (PPR) அனைத்திலும் பராமரிப்பு, மேம்பாட்டு பணிகளை இந்த ஆண்டு மேற்கொள்ளும் என்று நகர மெயர் தெரிவித்தார்.

இதற்காக 2026 பட்ஜெட்டின் கீழ் RM300 மில்லியன் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

“இந்த முயற்சி நகர வாசிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் DBKL-ன் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset