நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இனவெறி அறிக்கைகளால் இன நல்லிணக்கத்தை சீர்குலைப்பது கண்டிக்கத்தக்கது: கணபதிராவ்

கிள்ளான்:

இனவெறி அறிக்கைகள், பிற மதங்களைப் பின்பற்றுபவர்களை ஒடுக்குவது இந்த நாட்டில் உள்ள பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பொறுப்பற்ற செயல்களாகும்.

ஜசெக  தலைவரும், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான வி. கனபதிராவ் இதனை கூறினார்.

இதுபோன்ற அறிக்கைகள் மக்களிடையே வெறுப்பை விதைக்க மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தத் தயாராக இருக்கும் சில கட்சிகளின் பாசாங்குத்தனத்தையும் அறியாமையையும் தெளிவாகக் காட்டுகின்றன.

இன்று தனது முகநூல் பக்கத்தில் ஒரு அறிக்கையின் மூலம், கனபதிராவ், மலேசியா இன, மத பன்முகத்தன்மையின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டது, பரஸ்பர மரியாதை சூழலில் வாழ்கிறது, எனவே வெறுப்பு அல்லது விரோதத்தைத் தூண்டும் எந்தவொரு அறிக்கையையும் பொறுத்துக்கொள்ள முடியாது.

மற்றவர்களின் நம்பிக்கைகளைத் தாக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ மதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தக்கூடாது.

மாறாக சகிப்புத்தன்மை, மரியாதை மற்றும் சமூக நல்லிணக்கத்தின் மதிப்புகளுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.

இது சம்பந்தமாக, மக்களின் ஒற்றுமையைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு வகையான ஆத்திரமூட்டலையும் நிராகரிக்கவும், பல இன, பல மத நாடாக மலேசியாவின் பலமாக நீண்ட காலமாக இருந்து வரும் நல்லிணக்கத்தைத் தொடர்ந்து பாதுகாக்கவும் அனைத்து தரப்பினருக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset