நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெளிநாட்டினர் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறலாம் என்ற கூற்றை சுகாதார அமைச்சு விசாரிக்கிறது

புத்ராஜெயா:

சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், வெளிநாட்டினர் அரசு மருத்துவமனைகளில் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறலாம் என்ற கூற்றுகளை சுகாதார அமைச்சு  மறுத்துள்ளது.

சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்லி அகமது, இந்தக் கூற்றை அமைச்சு தீவிரமாகக் கருதுகிறது.

ஆனால் அதன் செல்லுபடித்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

சுகாதார அமைச்சு இந்த விஷயத்தை முழுமையாக ஆராய வேண்டும். இதில் ஒரு தகவல் வெளியிடுபவர் வெளிப்படுத்தியாரா என்பதை உறுதிப்படுத்தவுள்ளது.

அறிக்கையின் செல்லுபடியை எங்களால் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் பெறப்பட்ட தகவல்களை மதிக்க வேண்டியிருப்பதால் இந்த விஷயத்தை இன்னும் முழுமையாக விசாரிப்பது எனக்கு முக்கியம்.

அதே நேரத்தில், தகவல் தெரிவிப்பவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset