செய்திகள் மலேசியா
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
நாட்டில் நடந்து வரும் ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை.
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை வலியுறுத்தினார்.
ஆலயங்களை உடைப்பது, திரிசூலத்தை மிதிப்பது நாட்டில் பல சர்ச்சைகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆடவர்கள் குறித்து பேச நான் விரும்பவில்லை.
அதே வேளையில் இந்த சம்பவங்களை பார்த்துக் கொண்டும் மஇகா அமைதியாக இருக்காது.
குறிப்பாக இவ்விவகாரத்தை வைத்து மஇகா அரசிதலும் நடத்தாது.
இதன் அடிப்படையில் இது தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை சந்தித்து பேசினேன்.
ஆலய சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பது உட்பட பல விவகாரங்கள் குறித்து அவரிடம் பேசினேன்.
இந்த விவகாரம் குறித்து அவருக்கும் புரிகிறது. நானும் அவருக்கு புரியும்படி விளக்கம் தந்தேன்.
மேலும் மஇகா, மலேசிய இந்து சங்கம், மஹிமா இணைந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
குறிப்பாக மலேசிய இந்து ஆலய செயற்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 35 இயக்கங்கள் இந்த குழுவில் உள்ளது.
இந்த செயற்குழுவை கொண்டு ஆலயங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
யார் என்ன முயற்சிகளை செய்தாலும் ஆலயத்தையும் இந்து சமயத்தையும் ஒன்றும் செய்ய முடியாது.
இதை மஇகா உறுதியாக சொல்கிறது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 4:41 pm
கொழும்பு கம்பன் விழாவில் டத்தோஸ்ரீ சரவணன்
April 30, 2026, 11:57 am
உறுதிப்படுத்தப்பட்ட மலேசியா-ஸ்லோவாக்கியா நட்புறவு: டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசன்
April 30, 2026, 11:06 am
