நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதர்களில் தோன்றிய புலி: சமூக வலைதளத்தில் வைரலான காணொலியினால் மக்கள் பீதி

குளுவாங்: 

ஸ்ரீ லாலாங் அருகிலுள்ள கம்போங் ரஹ்மத் பகுதியில் புதர்களில் தோன்றிய புலி தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவி, அப் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நிமிடம் 36 விநாடிகள் கொண்ட அந்தக் காணொலியில், புலி மெதுவாக புதர்களுக்குள் நகரும் காட்சி பதிவாகியுள்ளது.

மாநில சுகாதார, சுற்றுச்சூழல் நிர்வாகக் குழு உறுப்பினர் லிங் தியான் சூன் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து வனவிலங்கு பாதுகாப்பு, தேசிய பூங்கா துறை தகவல் பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகளும் பணியாளர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வனவிலங்குகளை காணும் பொதுமக்கள் அவற்றை அணுகவோ அல்லது தொந்தரவு செய்யவோ கூடாது; அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து விலகி இருந்து உடனடியாக காவல்துறை அல்லது வனவிலங்கு பாதுகாப்புத் துறைக்கு தகவல் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பலரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த வழியாகச் செல்லும் மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset