நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெக்காலம் பகுதியில் வெளிநாட்டவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு: போலிஸ் விசாரணை தீவிரம்

ஜார்ஜ் டவுன்: 

20 வயதுகளுக்குள் உள்ள ஒரு வெளிநாட்டு நபர் காட் லெபு மெக்காலம் பகுதியில் இன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது தலையில் கடுமையான பொருட்களைப் பயன்படுத்தி தாக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் அப்துல் ரசாக் முஹம்மத் கூறுகையில், ஆரம்பகட்ட விசாரணையில் அந்த நபர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பின்னால் உள்ள திறந்தவெளியில் மயக்கமடைந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் அதே இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கு தொடர்பான தகவல்களைக் கொண்ட பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வருமாறும் அல்லது 019-2327008 என்ற எண்ணில் விசாரணை அதிகாரியைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset