நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலிஸாரை தாக்கிய 2 ஆடவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

குவாந்தான்: 

2 ஆடவர்கள் போலிசாரை காயப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று தங்கள் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்தனர். 

குற்றசாட்டப்பட்டவர்கள் முஹம்மத் சியாரிஃப் ஜவாஹித் (22), சியாபிக் ஃபர்ஹான் முஹம்மத் நோரிசாம் (22) ஆகும்.

அவர்கள் 2 மார்ச் அன்று இரவு 9 மணிக்கு குவாந்தான்-சுங்கை லெம்பிங் சாலையில், தெங்கு அம்புவான் அப்சான் மசூதி அருகே போலிஸார் பணியாற்றும் போது அவரை கொடுமையாக தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டனர். 

இவர்கள் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 332, பிரிவு 34 கீழ குற்றச்சாட்டப்பட்டுள்ளனர்.  குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset