நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் ஷவ்வால் பிறை மார்ச் 19ஆம் தேதி பார்க்கப்படும்

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் 29 இடங்களில் புதிய ஷவ்வால் பிறை பார்ப்பதற்கான தேதி மார்ச் 19 ஆம் தேதி மாலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நோன்பு பெருநாள் தேதி அன்று இரவு வானொலி, தொலைக்காட்சி மூலம் அறிவிக்கப்படும் என்று ஆட்சியாளர்களின் அரச முத்திரை பாதுகாவலர் அலுவலகம் அறிவித்தது.

மாட்சிமை தங்கிய மாமன்னர் உத்தரவை நிறைவேற்றும் விதமாக, ஆட்சியாளர்களின்  ஒப்புதலுடன்,

ஆட்சியாளர்களின் அர முத்திரைக் காப்பாளர் புதிய ஷவ்வால் பிறை பார்ப்பதற்கான தேதி 2026 மார்ச் 19 வியாழக்கிழமை மாலையில் நிர்ணயித்துள்ளார்.

அதாவது 29 ரமலான் 1447 ஹிஜ்ராவுடன் தொடர்புடையது என்று இன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோன்பு பெருநாள் தேதியை நிர்ணயிக்கும் முறை ருக்யாவ் ஹிசாப்பை அடிப்படையாகக் கொண்டது என்று ஆட்சியாளர்களின்  மன்றம்  ஒப்புக்கொண்டது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset