நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

RM4 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்: இரண்டு பேர் கைது

கிள்ளான்: 

சுமார் RM412,740 மதிப்புள்ள பட்டாசுகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் இரண்டு உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தக்க அனுமதியின்றி அந்த பட்டாசுகளை சேமித்து விற்பனை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மாலை 4 மணியளவில், பொது செயல்பாட்டுப் படையினருக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு, 29–32 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் வீட்டில் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் லாரியில் 272 பெரிய பெட்டிகளில் பட்டாசுகள் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். அனைத்து கைப்பற்றல் பொருட்களும் கிள்ளான் காவல் நிலையதிற்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset