செய்திகள் மலேசியா
உலக போர் விளைவு: மலேசியாவில் உணவு பாதுகாப்பு நிலைமை சீராக உள்ளது
புத்ராஜெயா:
மேற்கு ஆசியாவில் நடைபெறும் போரின் போதிலும், மலேசியாவில் உணவு விநியோகம், குறிப்பாக அரிசி தற்போது வரை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று விவசாய, உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் சாபு தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் முக்கிய உணவு இறக்குமதி பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான், ஆசியான் நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரேசில், அர்ஜென்டினா போன்ற நாடுகளிலிருந்து கிடைப்பதால், மேற்கு ஆசிய மோதலால் உடனடி தாக்கம் இல்லை என்று அவர் விளக்கினார்.
அதே நேரத்தில், போர் நீண்ட காலம் நீடித்தால் உலக எண்ணெய் விலை உயர்வின் காரணமாக போக்குவரத்து செலவுகள், இறக்குமதி பொருட்களின் விலை உயரக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
நாட்டின் தயார்நிலை குறித்து அவர் கூறுகையில், அரசு முன்கூட்டியே அவசர மேலாண்மை நடவடிக்கைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், தற்போது நாட்டில் ஏழு மாதங்களுக்கு போதுமான அரிசி கையிருப்பு இருப்பதாகவும் உறுதி அளித்தார்.
இதற்கு முன், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விவசாய அமைச்சகத்திற்கு வருகை தந்து அமைச்சகத்தின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 10:02 am
சண்டாக்கானில் பரபரப்பு: நள்ளிரவு தீ விபத்தில் 30 வீடுகள் சாம்பல்
April 28, 2026, 5:55 pm
700 கி.மீ பாசப் பயணம் சோகத்தில் முடிந்தது: குடும்பத்தைக் காண வந்த அதிகாரி விபத்தில் பலி
April 28, 2026, 5:38 pm
நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு சட்ட வழிகள் மூலம் தீர்வு காணப்படும்: ஜாஹித்
April 28, 2026, 5:37 pm
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் பிரச்சினை எதுவும் எழவில்லை: பிரதமர்
April 28, 2026, 5:35 pm
