செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி குறித்து இன்று அன்வரை சந்தித்தார் ஜாஹித்
சைபர்ஜெயா:
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, நெகிரி செம்பிலானில் நிலவும் அரசியல் நெருக்கடி குறித்து விவாதிப்பதற்காக, இன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமைச் சந்தித்தார்.
"இன்று, நான் உங்களுக்குச் சொல்ல முடியாது. நான் சொன்னாலும், உங்களால் உள்ளே நுழைய முடியாது" என்று, உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவுத் துறை அமைச்சின் அமலாக்க தின கொண்டாட்டத்திலும், தேசிய நுகர்வோர் கொள்கை 2.0-வின் வெளியீட்டிலும் கலந்து கொண்ட பின்னர் அவர் கூறினார்.
இதற்கிடையில், இன்று முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அன்வர், சந்திப்பை உறுதிப்படுத்தினார்.
நேற்று நெகிரி செம்பிலானின் ஆளுநர் முஹ்ரிஸ் துவாங்கு முனாவீரைத் தான் சந்தித்ததாகவும், மாநில அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று துவாங்கு முஹ்ரிஸ் உத்தரவிட்டதாகவும் அவர் கூறினார்.
நேற்று, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஹருன், தான் வழக்கம் போல் தனது கடமைகளைத் தொடர்வதாகக் கூறினார். மேலும், நெகிரி செம்பிலான் ஆளுநர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீரின் உத்தரவுக்கு இணங்க, மாநில நிர்வாகம் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து துவாங்கு முஹ்ரிஸுக்குத் தான் விளக்கமளித்ததாகவும், நிலைமை குறித்து இறுதி தெளிவு கிடைக்கும் வரை மாநில நிர்வாகம் தொடர வேண்டும் என்றும் அந்த ஆட்சியாளர் உத்தரவிட்டதாகவும் அமிருதீன் கூறினார்.
நேற்று முன்னதாக, மாநிலத்தின் 14 பாரிசான் நேசனல் சட்டமன்ற உறுப்பினர்கள், அமிருதீனுக்கு ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 28, 2026, 5:55 pm
700 கி.மீ பாசப் பயணம் சோகத்தில் முடிந்தது: குடும்பத்தைக் காண வந்த அதிகாரி விபத்தில் பலி
April 28, 2026, 5:38 pm
நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு சட்ட வழிகள் மூலம் தீர்வு காணப்படும்: ஜாஹித்
April 28, 2026, 5:37 pm
