செய்திகள் மலேசியா
ஆலயங்களுக்கு எதிராக விஷம பிரச்சாரங்கள்; போலிஸ் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: ரீஜன் குமார்
கோம்பாக்:
ஆலயங்களுக்கு எதிராக விஷம பிரச்சாரங்கள் நபர்கள் மீது போலிஸ் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பெர்சத்து கட்சியின் செலயாங் பெர்செகுது தலைவர் ரீஜன் குமார் ரத்னம் கூறினார்.
ஜம்ரி வினோத் என்பவர் தொடர்ச்சியாக மற்ற இன மக்களை பாதிக்கும் வகையில் பேசி வருகிறார்.
குறிப்பாக ஆலய விவகாரத்தில் அவரின் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது.
ஆலயங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அவர் மக்களை தூண்டுகிறார்.
இதன் அடிப்படையில் தான் கோம்பாக் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் அவருக்கு எதிராக போலிஸ் புகார் செய்யப்பட்டது.
இதே போன்று நாடு முழுவதும் போலிஸ் புகார் செய்யப்பட்டு வருகின்றன.
இதுபோன்ற நபர்கள் தான் நாட்டின் அமைதிக்கு எதிரானவர்கள். மக்களை திசை திருப்புகின்றனர்.
ஆக போலிஸ் அவர் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும் பினாங்கு மாநிலத்தில் நடத்தப்படவிருக்கும் ஆலயத்திற்கு எதிரான கூட்டத்தையும் போலிஸ் தடுத்து நிறுத்த வேண்டும்.
இதுவே எங்களது கோரிக்கை என்று ரீஜன் குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
