செய்திகள் மலேசியா
சிலாங்கூரில் கடும் வறுமை பிரச்சினை ஒழிக்கப்பட்டுள்ளது: பிரதமர் அன்வார்
ஷாஆலம்:
பல்வேறு பயனுள்ள வறுமை ஒழிப்பு முயற்சிகளைச் செயல்படுத்தியதன் விளைவாக, சிலாங்கூரில் நிலவிய கடும் வறுமைப் பிரச்சினை ஒழிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
ஷாஆலமில் தனது தலைமையில் நடைபெற்ற பெட்டாலிங் மாவட்ட வளர்ச்சிக் கூட்டத்தில் இந்த விஷயம் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இருப்பினும், எந்தவொரு குடும்பமும் சலுகைகளைப் பெறுவதில் இருந்து விடுபட்டுவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய, கண்காணிப்பு தொடர வேண்டும்.
மிக முக்கியமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் முன்னேறுவதற்கும், பயிற்சி மூலம் வலுவூட்டப்படுவதற்கும், அதன் மூலம் தங்களின் சொந்த வருமானத்தை ஈட்டுவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
மக்களின் வாழ்க்கைத் கண்ணியத்தை உயர்த்துவதற்கு சிலாங்கூரின் பொருளாதார வலிமை முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 10:28 am
தானா மேராவில் பரபரப்பு: 13 குற்றப் பின்னணி கொண்ட நபர் துப்பாக்கிச் சூட்டின் பின் அதிரடியாக கைது
April 30, 2026, 10:16 am
நாடற்ற நிலையில் நடுத்தெருவில் நிற்கும் குழந்தைகள்: சபாவில் தொடரும் அவலநிலை
April 30, 2026, 10:07 am
கடன் தகராறு: மாணவன் மீது கொடூரத் தாக்குதல்
April 30, 2026, 10:05 am
மானிய விலையில் டீசல் கிடைக்காததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளோம்: ரோரோ லோரி உரிமையாளர்கள் குமுறல்
April 30, 2026, 9:36 am
மலைப்பாதையில் விபரீதம்; பேருந்து சக்கரத்தில் சிக்கிய மாணவன்
April 29, 2026, 8:11 pm
நாளை முதல் ரோன் 97 பெட்ரோல் 5 சென்னும் ரோன் 95 பெட்ரோல் 10 சென்னும் உயரும்: நிதியமைச்சு
April 29, 2026, 8:09 pm
