செய்திகள் உலகம்
போரினால் இஸ்ரேலுக்கு வாரத்திற்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படும்: பெசலெல் ஸ்மோட்ரிச்
டெல் அவீவ்:
ஈரானுடன் நடைபெற்று வரும் போரின் விளைவாக இஸ்ரேலுக்கு வாரத்திற்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் வரை பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும் என அந்நாட்டு நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார்.
இந்த மதிப்பீடு, இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்பு கட்டளை அமல்படுத்திய “சிவப்பு” கட்டுப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் பணியிடங்களுக்கு செல்லும் இயக்கக் கட்டுப்பாடு, பள்ளிகள் மூடல், இராணுவ சேமப்படையினரை திரட்டுதல் ஆகியவை அடங்கும்.
வரும் வாரம் தொடக்கம் பொருளாதார இழப்புகள் தென்படத் தொடங்கும் எனவும், வாரத்திற்கு சுமார் 9.4 பில்லியன் இழப்பு ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமை மேலும் விரிவடைந்து வரும் நிலையில், மேற்காசியாவில் பெரிய அளவிலான போர் உருவாகும் அபாயம் குறித்த சர்வதேச கவலை அதிகரித்துள்ளது.
இரு தரப்பும் பதற்றத்தை தணிக்கத் தயாராக உள்ளன என்ற தெளிவான அறிகுறிகள் இதுவரை இல்லை என்பதால், நீடித்த நிலைதடுமாற்றம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 5:43 pm
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் மோதல் தீவிரம்: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்
March 5, 2026, 11:09 am
அணு ஆயுதம் ஏந்தும் போர் கப்பல் சோதனை: கிம் ஜாங் உன் கண்காணிப்பு
March 4, 2026, 10:37 pm
ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிந்தது
March 4, 2026, 5:14 pm
ஈரானில் பள்ளி தாக்குதல் குறித்து விசாரணை கோரிக்கை: PBB
March 4, 2026, 4:15 pm
மஷாத்தின் சொந்த ஊரான ஷியா கல்லறையில் கமெனி அடக்கம் செய்யப்படுவார்
March 4, 2026, 2:43 pm
சிங்கப்பூர் கொடிமலையில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
March 4, 2026, 2:19 pm
