நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

போரினால் இஸ்ரேலுக்கு வாரத்திற்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படும்: பெசலெல் ஸ்மோட்ரிச்

டெல் அவீவ்:

ஈரானுடன் நடைபெற்று வரும் போரின் விளைவாக இஸ்ரேலுக்கு வாரத்திற்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் வரை பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும் என அந்நாட்டு நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார்.

இந்த மதிப்பீடு, இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்பு கட்டளை அமல்படுத்திய “சிவப்பு” கட்டுப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் பணியிடங்களுக்கு செல்லும் இயக்கக் கட்டுப்பாடு, பள்ளிகள் மூடல், இராணுவ சேமப்படையினரை திரட்டுதல் ஆகியவை அடங்கும்.

வரும் வாரம் தொடக்கம் பொருளாதார இழப்புகள் தென்படத் தொடங்கும் எனவும், வாரத்திற்கு சுமார் 9.4 பில்லியன் இழப்பு ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமை மேலும் விரிவடைந்து வரும் நிலையில், மேற்காசியாவில் பெரிய அளவிலான போர் உருவாகும் அபாயம் குறித்த சர்வதேச கவலை அதிகரித்துள்ளது. 

இரு தரப்பும் பதற்றத்தை தணிக்கத் தயாராக உள்ளன என்ற தெளிவான அறிகுறிகள் இதுவரை இல்லை என்பதால், நீடித்த நிலைதடுமாற்றம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset