நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வான்வெளியில் ஆபத்து அதிகரித்ததால் மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்கள் திருப்பி விடப்பட்டன

சிப்பாங்:

ஈரானை சுற்றியுள்ள வான்வெளியில் ஏற்படக்கூடிய பதற்றம் காரணமாக, அனைத்துலக விமான பயணித்தில் இருந்த இரண்டு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்தது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து தோஹாவிற்குச் சென்ற எம்எச் 160 விமானம் கோலாலம்பூருக்குத் திரும்பியது.

அதே நேரத்தில் ஜெட்டாவிற்குச் சென்ற எம்எச் 156 விமானம் பாதுகாப்பு ஆலோசனைகள், அதிகரித்த வான்வெளி ஆபத்து ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியாவின் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.

மோதல் பகுதி திசைதிருப்பல் நெறிமுறையின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இரண்டு விமானங்களும் இப்போது பாதுகாப்பாக கேஎல்ஐஏ விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன என்று அந்நிறுவனம் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset