செய்திகள் மலேசியா
6.15 சதவீத ஈவுத் தொகையை ஈபிஎப் அறிவித்தது
சுங்கைபூலோ:
கடந்த 2025 டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடையும் ஆண்டிற்கான வழக்கமான சேமிப்பு, ஷரியா சேமிப்பு இரண்டிற்கும் 6.15 சதவீத குறைந்த ஈவுத்தொகை விகிதத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎப்) அறிவித்துள்ளது.
ஈபிஎப் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் சுல்கர்னைன் ஒன் இதனை அறிவித்தார்.
வழக்கமான சேமிப்புகளுக்கான மொத்த விநியோகத்தில் 67.1 பில்லியன் ரிங்கிட்டாகவும், ஷரியா சேமிப்புகளுக்கான மொத்த விநியோகத்தில் 12.5 பில்லியன் ரிங்கிட்டாகவும் உள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான மொத்த வருமான விநியோகம் 79.6 பில்லியன் ரிங்கிட் ஆகும்.
இன்று குவாசா டாமன்சாராவில் உள்ள மெனாரா ஈபிஎப்பில் நடைபெற்ற ஈபிஎப் நிதி செயல்திறன் விளக்கக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த 2024 ஆம் ஆண்டிற்கு, ஈபிஎப் சிம்பனன் கான்வென்ஷனல், சிம்பனன் ஷரியா ஆகிய இரண்டிற்கும் 6.3 சதவீத ஈவுத் தொகையை வழங்கியது.
இதில் மொத்த விநியோகம் 73.24 பில்லியன் ரிங்கிட் ஆகும்.
ஈபிஎப் அதன் உறுப்பினர்களின் சேமிப்பின் மதிப்பை நிலையான முறையில் மேம்படுத்துவதிலும் அவர்களின் ஓய்வூதியத் திட்டத்தை ஆதரிப்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான EPF பங்களிப்புக் கொள்கையில் திருத்தங்கள் குறிப்பிடத்தக்க உறுப்பினர் வளர்ச்சியைத் தூண்டின.
2024 இல் 16.2 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 2025 இல் 18.1 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 28, 2026, 1:30 pm
மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்
February 28, 2026, 1:25 pm
டிக்டாக் நட்பு கொடூரமாக மாறியது: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டு சிறை
February 28, 2026, 12:32 pm
ரமலான் உதவிகள் சமூக கடப்பாட்டை தாண்டி சமுதாய மக்களை ஒன்றிணைக்கிறது: டத்தோ அப்துல் ஹமித்
February 28, 2026, 12:00 pm
மாணவர் இஸ்லாத்தை அவமதித்த விவகாரம்; விசாரணை ஆவணங்கள் துணை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்டுள்ளன: போலிஸ்
February 28, 2026, 11:36 am
ஷவ்வால் பிறை குறித்து முன்கூட்டியே ஊகிக்க வேண்டாம்: முஃப்தி துறை
February 27, 2026, 10:57 pm
அனைத்துலகத் தமிழர் சித்தர் மரபு மாநாடு; சித்தர் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும்: டத்தோ சிவக்குமார்
February 27, 2026, 9:26 pm
