நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷவ்வால் பிறை குறித்து முன்கூட்டியே ஊகிக்க வேண்டாம்: முஃப்தி துறை

ஈப்போ:

ஷவ்வால் பிறை குறித்து முன்கூட்டியே ஊகிக்க வேண்டாம்.

அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக முஸ்லிம்கள் காத்திருக்க வேண்டும் என்று பேரா மாநில முஃப்தி துறை அறிவுறுத்தியது.

பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

எதிர்பார்ப்புகளிலிருந்து வேறுபாடுகள் வானியல் துறையில் நிகழக்கூடிய ஒன்று என்பதைப் புரிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

​பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் ஹிஜ்ரி நாட்காட்டி, வருடாந்திர திட்டமிடலுக்கான வழிகாட்டியாக ஹிசாப் தரவுகளின் அடிப்படையில் தொகுக்கப்படுகிறது.

இருப்பினும் ஷவ்வால் 1 அதிகாரப்பூர்வ நிர்ணயம், 29 ரமலான் மாலையில் ருக்யா ஹிலால் செயல்முறை, அதிகாரிகளின் அறிவிப்புக்கு உட்பட்டது. 

மேலும், இஸ்லாமிய மாதத்தின் தொடக்கத்தை நிர்ணயிக்கும் அமைப்பில் நாட்காட்டி எதிர்பார்ப்புகளுக்கும் அதிகாரப்பூர்வ முடிவுக்கும் இடையிலான எந்தவொரு வித்தியாசமும் அசாதாரணமானது அல்ல என்று அத்துறை முகநூலில் பதிவேற்றப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset