நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாகான் டத்தோவில் இனம், மதம், மொழி பாராமல் மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுகிறது: ஜாஹித்

பாகான் டத்தோ:

பாகான் டத்தோவில் இனம், மதம், மொழி பாராமல் மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுகிறது.

துணைப் பிரதமரும் பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள கிட்டத்தட்ட 1,000 இந்திய மாணவர்களுக்கு இன்று 180,000 ரிங்கிட் மதிப்புடைய கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது.

கடந்த 1982ஆம் ஆண்டு இத்தொகுதியின் அம்னோ இளைஞர் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து கல்விக்கு முன்னுரிமை அளித்து வருகிறேன்.

குறிப்பாக இனம், மதம், மொழி பாராமல் இத்தொகுதியில் உள்ள மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறேன்.

இந்த உதவி மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் என்று தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset