செய்திகள் மலேசியா
ஏகேபிஸ் தளபதியின் வாகனத்தை சுட்ட சந்தேக நபர் கைது
கோலாலம்பூர்:
புக்கிட் காயு ஹித்தாமில் உள்ள எல்லை கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமை (AKPS) தளபதியின் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
தற்போது அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக உள்துறை அமைச்சர், டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூஷன் இஸ்மாயில் தெரிவித்தார்.
நேற்று காலை 5.40 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், மூத்த உதவி ஆணையர் முஹம்மத் நாசருடின் எம். நாசிர் ஓட்டிச் சென்ற புரோட்டான் X70 காரைப் பல முறை துப்பாக்கியால் சூட்டுள்ளனர்.
எல்லைப் பகுதியில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் அமலாக்கப் படையினரைப் பயமுறுத்தும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் போலீஸார் நம்புகின்றனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 26, 2026, 2:36 pm
அமைதியும் முன்னேற்றமும் தான் மக்களின் விருப்பம்: அன்வார் இப்ராஹிம்
February 26, 2026, 1:05 pm
புக்கிட் பிந்தாங்கில் பரபரப்பு: தப்பிக்க முயன்ற வெளிநாட்டவர் மோதலில் குடியேற்ற அதிகாரியின் கால் முறிவு
February 26, 2026, 1:03 pm
மதப் பிரச்சார நடவடிக்கைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்: ஹன்னா இயோ வலியுறுத்தல்
February 26, 2026, 1:03 pm
வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர்
February 26, 2026, 1:01 pm
பள்ளிவாசல் உண்டியலைத் திருடிய 17 வயது இளைஞர் உட்பட 4 பேர் கைது
February 26, 2026, 12:04 pm
2027 கல்வித் திட்டம்: தொடக்கப் பள்ளிகளில் கணிதப் பாட நேரம் அதிகரிப்பு
February 26, 2026, 11:57 am
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீது போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கின் அரச விசாரணைக் கோரிக்கை நிராகரிப்பு
February 26, 2026, 11:53 am
ஈரானில் இருந்து திரும்பி வர மறுக்கும் மலேசியர்கள்: முஹம்மத் ஹசன்
February 26, 2026, 10:57 am
