நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர்

ரவுப்: 

இங்குள்ள கம்போங் பாமா கூலாட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கருகி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து தமது தரப்புக்கு இன்று அதிகாலை 3.35 மணிக்கு தகவல் கிடைத்ததாக ரவுப் மாவட்ட காவல் துறை தலைவர், சூப்பிரிண்டெண்ட் முஹம்மத் ஷஹ்ரில் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

“தீயணைப்பு பணிகள் முடிந்ததும், சம்பவ இடத்திலேயே அனைத்து பாதிக்கப்பட்டவர்களையும் கண்டறிந்தோம்,” என்றார் அவர்.

அனைத்து உடல்களும் மேலதிக விசாரணைக்காக ரவுப் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தீயணைப்பு குழுவினர் காலை 4.15 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும், 4.48 மணிக்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் பஹாங் தீயணைப்பு, மீட்புத் துறை இயக்குநர், டத்துக் முஹம்மத் ரஸாம் தாஜா ரஹிம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தத் தீ விபத்தில் வீடு முழுமையாக  சேதமடைந்ததுடன், மூன்று கார்கள் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து நாசமாகின.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset