நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீது போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கின் அரச விசாரணைக் கோரிக்கை நிராகரிப்பு

புத்ராஜெயா:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீது அரச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆணையம் வர்த்தகர்கள் சிலருடன் சம்பந்தப்பட்டிருப்பதாக அண்மையில் Bloomberg செய்தி வெளியிட்டது.

செய்தியறிக்கையில் குறிப்பிட்ட ஆவணங்களின் தகவல்களும் நேர்காணல் பதிவுகளும் வெளியாயின.

அதையொட்டி அரச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் லோக் (Anthony Loke) கோரினார்.

ஆதாரமில்லாத தகவலை வைத்து அரச விசாரணை மேற்கொள்ளமுடியாது என்றார் நிதியமைச்சின் அரசியல் செயலாளர் கமில் முனிம் (Kamil Munim).

இந்த விவகாரத்தைக் காவல்துறை விசாரிப்பதாகவும் அதற்கு ஒத்துழைப்பதாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது..

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset