நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தொடர் மழையால் பாலியில் பெருவெள்ளம்

டென்பசார்: 

பாலி தீவில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக பெருவெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டென்பசார் நகரின், அருகிலுள்ள நதிகள் கரைபுரண்டு ஓடியதால் பல குடியிருப்பு பகுதிகள் திடீர் வெள்ளத்தில் மூழ்கின. சில இடங்களில் நீர்மட்டம் ஒரு மீட்டர் வரை உயர்ந்ததாக கூறப்படுகிறது. 

வீடுகளுக்குள் முழங்கால் அளவிற்கு நீர் புகுந்ததால் மக்கள் தண்ணீரை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் வீட்டு உபயோகப் பொருட்களும் வாகனங்களும் சேதமடைந்தன.

கனமழையும் பலத்த காற்றும் மீட்பு நடவடிக்கைகளை சிரமப்படுத்தினாலும், செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் நீர்மட்டம் மெதுவாக குறையத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெள்ளத்தினால் இதுவரை உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset